Saturday, October 16, 2010

ரஜினி – சச்சின்… சில ஒற்றுமைகள்!

 ஒரு ரசிகரின் ‘டச்சிங்’ அலசல்
எதிர்ப்பார்ப்புகள், சுயநலங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதரை, கலைஞரை மக்கள் உயிருக்கு நிகராக நேசிப்பார்களா…?

இந்த கேள்விக்கான விடையை என் அனுபவத்தில் இரண்டு மாபெரும் மனிதர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

அதில் ஒன்று எனது பள்ளிப் பருவத்தில்… அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது.

இப்போது ரஜினியின் மூலமாக. சொல்லப் போனால், அரசியல்-பதவி என எதுவும் இல்லாமலேயே, ஒரு பெரிய விஷமிக் கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களையும் தாண்டி மக்களின் மனதில் ரஜினி ஆட்சி செய்வது எத்தனை பெரிய சாதனை!

ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்று கூறும் பலருடனும் பேசியதில், தெரிந்த ஒரு விஷயம், அவர்களில் பலர் நல்ல விஷயஞானமுள்ளவர்கள் என்பது. குறிப்பாக எழுதுவதில். தேர்ந்த எழுத்தாளனின் சரளத்தோடு, சுவையாக எழுதும் திறமை இவர்களில் பலருக்கும் இருக்கிறது.

கீழே நீங்கள் படிக்கவிருப்பது, நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு ரஜினி ரசிகரின் கடிதம்தான். அதாவது கடிதமென்று தனியாக எழுதப்பட்டதல்ல. இரு கட்டுரைகளுக்கு அவர் எழுதிய கமெண்டுகள்தான். அவற்றை தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள்!

-வினோ

1980 ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திலிருந்து 30 வருடங்கள் என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறார் ரஜினி.

என் வாழ்வில் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் அதிகமாக நினைவில் இருப்பவை ரஜினி சம்பந்தப்பட்டவையே. முரட்டுக்காளையிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. யாருடன் எந்தக்காட்சி என்பது உட்பட.

இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும். முரட்டுக்காளையிலிருந்து எந்திரன் வரையிலான ரஜினி படங்களின் பெயர்களை மூச்சுவிடாமல் தடுமாறாமல் என்னால் சொல்லமுடிகிறது.

இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி எந்த அளவுக்கு என்னில் ஊடுறவியுள்ளார் என்பதை நினைக்கும்போது அதுவும் சொல்லத் தோன்றவில்லை. லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்!!


என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே சூப்பர் ஸ்டார்கள்தான் ஒன்று ரஜினி… இன்னொருவர் சச்சின்.

சத்தியமாக இதை நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய.

முதல் ஒற்றுமை, துவக்க காலத்தில் இருந்தே இருவருமே தங்கள் துறையில் முடி சூடா மன்னர்களாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்களுக்கு முன் தங்கள் துறையில் உச்சத்தில் இருந்தவர்களை காப்பி அடிக்காமல் தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை உருவாக்கினர். இன்று இவர்களை பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பியடிக்கிறார்கள்.

வயது ஆக ஆக இருவரின் திறமையும்,புகழும் கூடிக்கொண்டே போகிறது. இருவருமே மற்றவர்களை விட அதிக பட்சமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்கள். அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பேச்சில் பதில் சொல்லாமல் செயலில் பதில் சொன்னவர்கள்.

ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடிப்பவர்கள். புகழின் உச்சத்தை பார்த்த பின்னரும் தன்னிலை மாறாமல் அடக்கமாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்கள் துறைகளில் தங்களுக்கும் தங்களுக்கு அடுத்து இருப்பவர்களுக்குமான இடைவெளியை மிகவும் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருப்பவர்களால் நெருங்கவே முடியாத உயரம் அது.

இருவருமே தங்கள் குடும்ப வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். இருவருமே இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் ஓய்வைப் பற்றியும் மற்றவர்கள் விவாதிக்கிறார்கள், ஆனால் இவர்களோ இன்னும் ஒரு தலைமுறையை பார்ப்பார்கள் போலிருக்கிறது!

அடுத்த சச்சின் அடுத்த ரஜினி என்று வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

பெரும்பாலான மக்களுக்கு, கிரிக்கெட்டும், சினிமாவும் விருப்பமானவை அல்ல. ஆனால் சச்சினும், ரஜினியும் விருப்பமானவர்கள். இவர்கள் எது செய்தாலும் மீடியாவுக்கு அதுதான் தலைப்புச் செய்தி.

சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும்.

அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை!

அந்நிய முதலீடு வரத்து வளர்ச்சியா? வினையா?

இந்தியாவின் பங்குச் சந்தைகளிலும், கடன் பத்திரங்களிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களால் செய்யப்படும் முதலீடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறதா அல்லது பொருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதித்து வீழ்ச்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி பொருளாதார வட்டாரங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உரையாற்றியுள்ள இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ஆர்.வி. சுப்பா ராவ், அந்நிய முதலீட்டு வரத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறுகிய கால நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். பங்குச் சந்தைகளிலும் கடன் பத்திரங்களிலும் ஒரு அளவிற்கு அதிகமாக அந்நிய முதலீடு என்பது கவலைக்குறியது என்கிற உலகளாவிய பொருளாதார நிபுணர்களின் கருத்தை ஒட்டியே சுப்பா ராவின் கருத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அந்நிய முதலீட்டு வரத்து ஒரே நேரத்தில் மிக அதிகமாக வருவதும், ஒரு நேரத்தில் வெளயேறுவதும் நாட்டின் பெருளாதார நிலைத்தன்மையை பாதிக்கும் என்றால், அப்போது (இந்திய மைய வங்கி) தலையிட்டே தீரும். நாங்களும் தலையிடுவோம். ஏற்றுமதி - இறக்குமதி அடிப்படையிலான நடப்பு கணக்கில் உபரி உள்ள பொருளாதார நாடுகளே தலையிடும்போது, இந்தியாவைப் போன்ற பற்றாக்குறை உள்ள நாடு தலையிடாமல் இருக்க முடியாது” என்ற பொருளில் சுப்பா ராவ் பேசியுள்ளார்.

இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) இதுவரை 22 பில்லியன் டாலர்களை (சற்றேறக்குறைய ரூ.10,000 கோடி) முதலீடு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியாவின் கடன் பத்திரங்களில் 10 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இந்த அளவிற்கு இவர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யக் காரணம், தங்கள் (வளர்ந்த) நாடுகளில் வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் வட்டியை விட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யக் கூடிய முதலீடுகளில் அதிக வருவாய் கிட்டுகிறது என்பதே.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் இந்த முதலீடு பங்குச சந்தை வர்த்தகத்தை விறுவிறுப்பாக்கினாலும், அது இந்தியாவின் பெருளாதாரத்தை வேறு விதத்தில் பாதிக்கிறது. மிக அதிக அளவிற்கு வரும் முதலீடுகளால் பங்குகளின் விலையேற்றம் தாறுமாறாக உயர்கிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளின் எதிரொலியால் அவர்கள் மிகப் பெரிய அளவிற்கு பங்குகளை விற்கும்போது தாறுமாறாக சரிவையும் ஏற்படுத்துகிறது. இது பங்குச் சந்தையில் ஒரு எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்களை பாதிக்கிறது.

மற்றொரு வகையில், பெரிய அளவிற்கு டாலர் வரத்தால், அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு குறைகிறது. இது நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களை பாதிக்கிறது. நமது நாட்டின் ஏற்றுமதிக்கு செலாவணி மாற்றில் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் ஆளாவதால், அவர்கள் வேறு நாட்டு சந்தைகளை பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இப்படி ஒரு விதத்தில் சாதகமாகத் தெரியும் அயல் நாட்டு முதலீடுகள், மற்றொரு வகையில் நாட்டின் பெருளாதாரத்தின் நிலைத் தன்மையை பாதிக்கின்றன. இதனைத் தடுக்கவே, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்நிய முதலீடு வந்தால் அதன் மீது மூலதன வரி விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வழிமுறையை மெக்சிகோ, தென் கொரிய நாடுகள் கடைபிடிக்கின்றன.

இதைத்தான், இந்திய மைய வங்கியின் ஆளுநர் சுப்பாராவ், “நாங்களும் தலையிடுவோம” என்று கூறியுள்ளதன் பொருளாகும்.

ஆனால், சுப்பா ராவின் கருத்திற்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. வாஷிங்டனில் அந்நிய முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசுகையில், “அந்நிய முதலீடுகளால் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை, இப்படிப்பட்ட காரணிகளைக் கருத்தில்கொண்டு தடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் குறுகிய காலத்தில் எதிர் வினைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.

அந்நிய முதலீட்டு வருகவெள்ளத்தால் “இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஒன்றும் இப்போது இல்லை. முதலீட்டு வருகையும் வெளியேற்றமும் பெரிதாக ஏற்படவும் இல்லை. அது எங்களது சந்தை மன நிலையை பாதிக்கவும் இல்லை. எனவே அந்நிய முதலீட்டு வருகைக்கு உச்சரவரம்பு விதிக்கும் அவசியம் ஏதுமில்லை” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளின் சந்தைகளில் வளர்ந்த நாடுகளின் நிறுவன முதலீட்டாளர்கள் மேலும் 825 பில்லியன் கோடி (ரூ.37,12,500 கோடி) முதலீடு செய்யவுள்ளனர் என்று சர்வதேச நிதிக் கழகம் தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட முதலீட்டு வருகையால் ஏற்படும் பாதிப்பு என்ன? “வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாயை விட, வளரும் நாடுகளில் கிடைக்கும் வட்டி வருவாய் அதிகம் என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கி அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவிகின்றன. இது நமது நாணய மதிப்பு மேலாக உந்தித் தள்ளுவதோடு, பெருளாதார நிலைத் தன்மையை சிக்கலாக்குகிறது. அதன் காரணமாக பணவீக்கம், வளர்ச்சி, நாணய கொள்கை ஆகியவற்றை கையாள்வதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று சுப்பா ராவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உருவான வீட்டுக் கடன் நிதி ஆளுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உருவான பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவும், அதனை மிகவும் சார்ந்துள்ள பொருளாதாரங்களான ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றையும் பெருமளவிற்குப் பாதித்துள்ளது. இந்த மூன்று நாடுகளும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தங்கள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பெருமளவிற்கு நோட்டை அச்சடித்து சுழற்சியில் விடுகின்றன. அவைகள் முதலீடுகளாக வளரும் நாடுகளின் சந்தைகளை நோக்கிப் பாய்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட முதலீட்டு வரவை வரவேற்கும் ஒரே நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி உள்ளார்!

அந்நிய நிறுவன முதலீடுகள் மேலும் வருவதற்கு ஏதுவாக, இந்திய பத்திரங்களில் செய்யும் முதலீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை இரு மடங்களாக உயர்த்தி 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய வழியேற்படுத்தியுள்ளார். இந்திய நாட்டின் பெரு நிறுவனங்களின் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் உச்சவரம்பை இதே அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு அந்நிய முதலீட்டை கிரகிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அதனை அனுமதிக்க வேண்டும். அந்த வரையறையை தாண்டும்போது கட்டுப்பாட்டு அவசியமானது என்று நிதி ஆலோசனை அமைப்புகள் கூறுகின்றன.

இதனையெல்லாம் உணர்ந்தவராக உள்ள மைய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கையுடன் பேசுகிறார். ஆனால், நமது நாட்டின் நிதியமைச்சரோ, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய முதலீடுகளால் மட்டுமே சாத்தியமாகும் என்பதுபோல் பேசி வருகிறார்.

அமெரிக்காவீன் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான லீமென் பிரதர்ஸ் சரிந்து விழுந்ததையடுத்து உருவான சங்கிலித் தொடர் வினைகளால் அந்நாட்டு பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு பெரும் ‘மாற்றம்’ நிகழ்ந்தால் மட்டுமே நமது நாட்டு அரசும் விழித்துக்கொள்ளுமோ என்னவோ?

Friday, October 15, 2010

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

எண்பதுகளில், கபில்தேவ் சகாப்தத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்த பலரும், இன்று கிரிக்கெட் என்றாலே வெறுப்புடன் பார்க்கும் நிலை. எங்கும் சூதாட்டம், வீரர்களின் பண வெறி, கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கபிலுக்கு நிகரான இயல்புகளுடன் கூடிய கிரிக்கெட் வீரர்கள் இல்லாமல் போனது முக்கிய காரணம்.

அன்றைக்கு இந்திய அணியின் ஸ்கோர் என்னவென்று கேட்கும்போதே, “கபில் இருக்காரா.. அவுட்டா?” என்று கூடவே ஒரு துணைக் கேள்வியும் கிளம்பியதைப் பாரப்த்திருப்பீர்கள். இன்றும் அந்தக் கேள்வி தொடர்கிறது, ‘சச்சின் ஆடறாரா?’.

கபில், அமர்நாத், பின்னி காலத்து ரசிகர்களுக்கு இன்று பெரும் ஆறுதலாக இருக்கும் ஒரே வீரர், சச்சின் டெண்டுல்கர்தான் என்றால் மிகையல்ல. ‘இது தனிமனித துதிதானே… குழு விளையாட்டான கிரிக்கெட்டில் இது ஆபத்தல்லவா?’ என்று கேட்கலாம்.

இதற்கான காரணத்தை ஆராயப்போனால், அது இந்திய அணியின் தேர்வு முறை, எப்போதும் தனியொரு வீரரே அணியின் வெற்றியை தோளில் சுமப்பது என வேறு திக்கில் போகும். இப்போதைக்கு அது வேண்டாம்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பெங்களூரில் புதன்கிழமை முடிந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் ஆடிய ஆட்டம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசிகர்களை உள்ளம் குளிர வைத்தது.

முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக இரட்டை சதமடித்த டெண்டுல்கர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டின்றி 53 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக நின்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் புரட்டி எடுக்க டெண்டுல்கர் பெரும் உதவி் புரிந்தார். இந்திய பந்துவீச்சாளர்களும் சோடை போகவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூர் டெஸ்டில் ஜாஹீர் கானின் பந்துவீச்சு ரோஜர் பின்னியின் மாயாஜால மீடியம் பேஸை நினைவூட்டியது.

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்… டெண்டுல்கரிடம் மட்டும் என்ன சிறப்பு?

கிரிக்கெட்டை ஜென்டில்மென் விளையாட்டு என்பார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர்கள் கபில்தேவ், மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ்… இப்போது சச்சின் டெண்டுல்கர்.

மைதானத்தில் சிறப்பாக ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் அல்லது அவரது சீனியர் ஸ்டீவ் வாஹ் அல்லது அவருக்கும் முந்தைய ஆலன் பார்டர் போன்றோர் புரிந்த சாதனைகள் நினைவுக்கு வருவதில்லை. அவர்களின் அழுகுணித்தனங்கள்தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். பாகிஸ்தான் வீரர்கள் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை விட பலமடங்கு மோசமானவர்கள்.

ஆனால் கபில்தேவை நினைத்தால் அவரது சிரித்த முகமும், மைதானத்தில் எதிரணி வீரர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு விளையாட்டை விளையாட்டாய் நேசிக்கும் மனப்பாங்கும் நமது மனக்கண்ணில் மின்னும்.


ஹைதராபாதில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை. வழக்கம்போல கபில்தான் கடைசி ஓவர் வீசினார். முதல் விக்கெட் விழுந்துவிட்டது. அடுத்த இரு பந்துகளில் 4 ரன்கள் கொடுத்தார். இன்னும் 5 ரன்கள் எடுத்தால் மேற்கிந்திய தீவு வென்றுவிடும் நிலை. கபில் பந்து வீசும் முனையில் வில்லியம்ஸ் என்ற விக்கெட் கீப்பர் ஆடிக்கொண்டிருந்தார். நான்காவது பந்தைப் போடும் முன் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு பேசிய கபில், சிரித்தபடி ஸ்டம்புகளைக் காட்டி ‘பேக்அப்’ என்று கூறிவிட்டு, மீண்டும் பந்து வீச ஓடி வந்தார்.

அவர் சொன்னதுபோலவே, எதிர்முனையில் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது கபில் பந்து. இந்தியா வென்றது. உடனே வில்லியம்ஸ் கபிலை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் (தம்ஸ்அப்) காட்டி சிரிக்க, அவரை கபில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த மாதிரி ஒரு ஸ்போர்டிவான முடிவை எந்த கிரிக்கெட் போட்டியிலாவது சமீப நாட்களில் பார்த்திருப்பீர்களா…

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், பந்தை அடிக்காமலேயே ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடி வந்தார் அபுதுல் காதர். க்ரீஸை விட்டு சிறிது தூரம் வந்துவிட்டார். விதிப்படி அது தவறுதான். அப்போது பந்து கர்ட்னி வால்ஷ் கையில் இருந்தது. ஆனால் அவர் ஸ்டம்பை நோக்கி வீசாமல், காதரை எச்சரித்தார். அவரும் உடனே க்ரீஸுக்குள்ளே போய் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். அதன் பிறகு போர், சிக்ஸர் என வெளுத்தார். விளைவு, போட்டியிலிருந்தே மேற்கிந்தியத் தீவு வெளியேறியது. இருந்தாலும் பாகிஸ்தானின் வெற்றியைவிட, வால்ஷின் அந்த பெருந்தன்மை பெரிதும் பேசப்பட்டது.

இவர்கள் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டிய அதிசயமான வீரர்தான் சச்சின் டெண்டுல்கரும்.

மைதானத்தில் கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, எதிரணி வீரர்களிடம் மல்லுக்கு நிற்பது, அம்பயரை முறைப்பது என எதிலும் இறங்காதவர் சச்சின். எந்த நாட்டு கிரிக்கெட் வீரரும், சச்சினை மட்டும் மிக நாகரீகமான, பண்புள்ள வீரர் என்று பாராட்டுவதைக் கேட்கலாம். இன்று, ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறார் சச்சின்.

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள சர்வே முடிவில் 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் சச்சினை சிறந்த வீரராகக் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘இந்தியாவின் விலை மதிப்பில்லா விளையாட்டு வைரம் சச்சின் டெண்டுல்கர்’ என்று பெருமைப்படுத்தியுள்ளது அந்தப் பத்திரிகை.

உலகில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாடுகளிலும் சச்சின் ஒரு மரியாதைக்குரிய வீரராகவே பார்க்கப்படுகிறார்.

சச்சின் தன் சொந்த சாதனைகளுக்காகவும் பணத்துக்காகவும் ஆடுவதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதில் சற்றும் உண்மையில்லை என்பது அவர் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.


“கிரிக்கெட்டில் நான் அதிக முக்கியத்துவம் தருவது ஒரேயொரு விஷயத்துக்குத்தான்… அது நேர்மை. இந்த விளையாட்டை நேர்மையான முறையில், சுத்தமாக ஆட வேண்டும். பணம் பெரிதல்ல. அதுதான் இருபதாண்டுகள் கடந்தும் இன்னும் இந்த விளையாட்டில் என்னை இருக்க வைக்கிறது” என்கிறார் சச்சின்.

“கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த பிறகு பணத்தைப் பற்றியோ, எனது தனிப்பட்ட சாதனைகள் குறித்தோ நான் யோசிப்பது கூட கிடையாது. அதிக பணம், குறைந்த ரன்கள் என்ற கேவலமான நினைப்பு என் மனதிலிருந்திருந்தால் என்னால் தூங்கமுடியாமலே போயிருக்கும்” என்ற அவரது வார்த்தைகளில் எந்த பாசாங்கையும் காண முடியாது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ள சச்சின், இந்திய அணிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஒரு விலை மதிப்பற்ற கோஹினூராய் ஜொலிக்கிறார்!

இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஒரேயொரு விண்ணப்பம்… கபிலுக்கு செய்தது போல, ‘எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை சச்சினிடமும் கேட்குமாறு மீடியாவைத் தூண்டிவிடாதீர்கள்..!

Thursday, September 30, 2010

அயோத்தி வழக்ககின் தீர்ப்பு

COURTESY : TAMIL WEBDUNIA
பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது: நீதிபதி எஸ்.யு. கான்  
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. 


அயோத்தி வழக்கிலஇன்றமதியமதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது. இதிலசர்ச்சைக்குரிபாபரமசூதி பகுதி 3 பாகங்களாகபபிரிக்கப்பட்டஇஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றுமஅறக்கட்டளையாநிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குசசொந்தமானதஎன்றதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது.

இந்தத்ததீர்ப்பவழங்கிய 3 நீதிபதிகளிலஒருவராசுதிரஅகர்வாலஅவர்களினதீர்ப்பினமுக்கிஅம்சங்களிலசிவருமாறு:

1. சர்ச்சைக்குரிஇடத்திலமையககூரையினகீழஉள்பகுதி இந்துக்களினமதநம்பிக்கைகளினபடி ராமரபிறந்இடமே.

2. சர்ச்சைக்குரிபகுதி எப்போதுமமசூதி என்பதாகவஎடுத்துககொள்ளப்பட்டநம்பப்பட்டவருகிறது. இதனாலமொகமதியர்களஇங்கவழிபாடசெய்துவந்தனர். இருப்பினுமஅதபாபரால் 1528ஆமஆண்டுதானகட்டப்பட்டதஎன்பதநிரூபிக்கப்படவில்லை.

3. இதகுறித்மாற்றகோரிக்கைகளோ, வேறதடயங்களோஇல்லாபட்சத்திலசர்ச்சைக்குரிஅமைப்பஎப்போதயாராலகட்டப்பட்டதஎன்பதஉறுதி செய்முடியாது. ஆனாலஜோசபடைஃபென்தாலரஎன்பவரவருவதற்கமுன் 1766 - 1771 ஆமஆண்டுகளிலகட்டப்பட்டதஎன்பதவரதெளிவாஉள்ளது.

4. சர்ச்சையிலஉள்இந்கட்டிடம், அதற்கமுன்பஅங்கிருந்இஸ்லாமஅல்லாசமயககட்டிஅமைப்பைததகர்த்துககட்டப்பட்டுள்ளது. அதாவதஇந்துககோயில்.

5. சர்ச்சையிலஉள்கட்டிடந்த்தினமையக்கூரையினகீழ்ப்பகுதியிலவிக்ரகங்களடிசம்பர் 1949ஆமஆண்டு 22 மற்றும் 23ஆமதேதி இரவிலவைக்கப்பட்டது.

அது இராமர் பிறந்த இடமே: நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு  

அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு:

1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா?

தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது.

இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. அது வடிவமற்றதாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வணங்குபவரின் பிரார்த்தனைக்கேற்ப உருவமாகவும் வரக்கூடியதாகும்.

2. தகராறுக்கு உட்பட்ட அந்த கட்டடம் ஒரு மசூதியா? அது எப்போது, யாரால் கட்டப்பட்டது?

தீர்ப்பு: தகராறுக்கு உட்பட்ட அந்தக் கட்டடம் பாபரால் கட்டப்படது. எந்த ஆண்டில் என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஆனால் அது இஸ்லாத்தின் நெறிகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. எனவே அது மசூதி என்பதற்குரிய தகுதியை பெற்றிருக்க முடியாது.

3. அங்கிருந்த ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்த மசூதி கட்டப்பட்டதா?

தீர்ப்பு: ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கட்டுமானத்தை தகர்த்தப் பின்னரே தகராறுக்குட்பட்ட இந்தக் கட்டடம் (பாபர் மசூதி) கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுமானம் ஒரு ஹிந்து மதம் தொடர்பானது என்று இந்திய தொல்லியல் துறை நிரூபித்துள்ளது.

4. அந்தக் கட்டத்திற்குள் இராமர் உள்ளிட்ட சிலைகள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் வைக்கப்பட்டதா?

தீர்ப்பு: தகராறுக்குட்பட்ட அந்த கட்டடத்தின் நடுக் கூரைக்குக் கீழே 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

5. தகராறுக்குட்பட்ட அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடும் மனுக்கள் ஏதேனும் அதற்குரிய கால வரையறையைத் தாண்டியவையா?

தீர்ப்பு: 1989ஆம் ஆண்டு உ.பி. மாநிலம், லக்னோ சுன்னி மத்திய வக்்ப் வாரியம் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராக கோபால் சிங் விஷாரத் மற்றும் பலர் ஆகியோர் தொடர்ந்த மனு ஒ.எஸ்.எஸ். எண் 4,
1989ஆம் ஆண்டு நிர்மோஹி அஹாரா மற்றும் ஒருவருக்கு எதிராக ஜமுனா பிரசாத் சிங் மற்றும் பலர் தொடுத்த மனு ஓ.எஸ்.எஸ். எண் 3 ஆகியன காலம் கடந்தவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன.

6. தகராறுக்கு உட்பட்ட கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி தொடர்பான நிலை என்ன?

தீர்ப்பு: இந்த தகராறுக்கு உட்பட்ட இடத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் இராம் சந்திர ஜி பிறந்த இடமும், சரண், சீதா ரசோய் ஆகியனவும், வழிப்படப்படும் மற்ற சிலைகளும், பொருட்களும் ஹிந்துக்களுக்கே உரியவை. நினைவிற்கு எட்டாத காலம் முதலே தகராறுக்குரிய அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தகராறுக்குட்பட்ட கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னர் அந்த இடத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22,23ஆம் தேதிகளுக்குட்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தகராறுக்குட்பட்ட இடத்தின் வெளிப்பகுதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதும். வெளியேயும், தகராறுக்கு உட்பட்ட உள்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகராறுக்குட்பட்ட கட்டுமானம் (பாபர் மசூதி) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை மசூதி என்று ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதி தரம் வீர் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tuesday, September 28, 2010

அடால்ஃப் ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்


 
COURTESY : WEBDUNIA TAMIL

உலகினமிகககொடூரமாஎதேச்சதிகாரியான, நாஜி ஜெர்மனியினஅதிபரான, அடால்ஃபஹிட்லரதனதஆரம்காலங்களிலஒரஓவியராஇருந்தாரஎன்றாலநம்முடிகிறதா? ஆம்! தீவிகலஉள்ளத்திலிருந்ததீவிஆதிக்வெறி உருவாகிவிட்டதஎன்றகலஎதிர்ப்பாளர்களஉணர்ச்சி வசப்படவேண்டாம்!

அவருமதனதகலஉள்ளத்தவெளிப்படுத்ஓவியத்தவரைந்தாரஎன்பததெரியவில்லை, ஆனாலஅப்போதஅவரிடமசல்லிகாசகிடையாதஎன்றுமஅதனாலதனவாழ்வாதாரத்திற்காஅவரஓவியமவரைந்தாரஎன்றுமகூறப்படுகிறது.

1908ஆமஆண்டஅவரவரைந்ஓவியங்களஇந்ஆண்டஏலத்திற்கவருகிறது. 1,50,000 பவுண்டுகளுக்கஅந்ஓவியங்களவிற்கப்படலாமஎன்றலண்டனிலிருந்தவெளிவரும் 'டெய்லி டெலிகிராஃப்' பத்திரிக்கசெய்தி கூறுகிறது.

ஆஸ்ட்ரியநாட்டினஒரமிகப்பெரிபண்ணையிலஇந்ஓவியங்களகண்டெடுத்தவரபெயரதெரியாஒரவழக்கறிஞர்.

மிகப்பெரிபண்ணநிலத்தைசசுற்றியுள்காட்சிகளஅவரவாட்டரகலரபெயிண்டிஙசெய்துள்ளாரஹிட்லர். சாலை, சர்ச், தொழிற்சாலைகளினவரிசஎன்றஅவரஓவியமதீட்டியுள்ளார்.

அந்தககாலங்களிலஅவரதஒரவேலவெளியசென்றஓவியமதீட்டுவதாமட்டுமஇருந்ததாமுல்லாக்ஸநிறுவனத்தினரிச்சர்டவெஸ்ட்வுடஎன்பவரதெரிவிக்கிறார். அந்தககாலக்கட்டத்திலஅவரிடமகாசபணமஇல்லஎன்றுமஅவரகூறுகிறார்.

வியன்னாவிலஉள்கல/ஓவியககழகத்திலஹிட்லரதொழில்பூர்ஓவியராவதற்காவிண்ணப்பமசெய்திருந்ததாகவும், ஆனாலஇரண்டமுறஅவரதவிண்ணப்பமஏற்கப்படவில்லஎன்றுமலண்டனநாளேடசெய்திககுறிப்பகூறுகிறது.

அப்போதஹிட்லரமனிதர்களஓவியத்திலவரையுமபோதஅவரதசிந்தனசரியாஇல்லஎன்காரணத்தினாலஅவரநிராகரித்தனரஎன்றுமகூறப்படுகிறது.

விண்ணப்பமமறுக்கப்பட்டது, அவரஒரஓவியராஏற்கப்படாததகுறித்தநிறைஆய்வுகளநடைபெற்றன. ஆனாலஅவரஓவியராஏற்றகொண்டிருந்தாலவரலாற்றிலஅவரசெய்கொடூரமும், ஜெர்மனமக்களகாலங்காலமாகுற்றவுணர்விலதள்ளியூதப்படுகொலைகளும், இரண்டாமஉலகபபோருமநடைபெறாமலகூடபபோயிருக்கலாமஎன்றுமஒரசிஆய்வாளர்களதெரிவித்துள்ளனர்.

ஓவியககழகமஒரகலைஞனஇழந்ததஎன்னவதெரியாது, ஆனாலஅவரமனுவஏற்காததுதானஅவரதமனதிலஆழமாமனிவிரோசிந்தனைகளவளர்த்திருக்குமஎன்றஒரசிலரகருதுகின்றனர்.

ஹிட்லரினஓவியங்களஇம்மாதம் 30ஆமதேதி ஏலத்திற்கவருகிறது.

Friday, September 24, 2010

கேப்டனால் டைட்டானிக் விபத்து!

COURTESY : WEBDUNIA TAMIL
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என்ற புதுத் தகவல் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் "டைட்டானிக்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான பிறகே உலகில் பலருக்கு, டைட்டானிக் என்ற ஒரு ஆடம்பர மற்றும் பிரமாண்டமான கப்பல் தயாரிக்கப்பட்டதும், அந்த கப்பலின் முதல் பயணமே விபத்தில் முடிந்ததும் பற்றிய தகவலே தெரிந்தது.

1912 ல் இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் ஹாம்ஷிர் என்ற நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரான சவுதாம்ப்டனிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பயணித்த டைட்டானிக் கப்பல், வேகமாக சென்றதாலும், எதிரே பனிப்பாறையை அக்கப்பல் கேப்டன் கவனித்து சுதாரிப்பதற்குள் அதில் மோதியதாலும் உடைந்து மூழ்கியதாகவே இதுநாள் வரை ஆண்டாண்டு காலமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், விபத்துக்கு அந்த கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக செலுத்தியதே காரணம் என்று புதுத் தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது லண்டனில் வெளியாகி உள்ள " குட் அஸ் கோல்ட்" ( Good as Gold ) என்ற புத்தகம்!

"கப்பல் பனிப்பாறையில் மோதிவிடாமால் தவிர்க்க நிறைய நேர அவகாசம் இருந்தது. ஆனால் கேப்டன் பீதியடைந்து பதற்றத்திலும், அவசரத்திலும் தவறான பாதையில் கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அந்த நேரத்தில் அந்த தவறு நிகழாமல் சரி செய்திருக்கலாம். ஆனால் விபத்தை தவிர்ப்பதற்கு கேப்டன் சுதாரிப்பதற்குள் காலம்கடந்து, பனிப்பாறையில் மோதியதால் அந்த மாபெரும் டைட்டானிக் கப்பலில் ஓட்டை விழுந்து, கடல் தண்ணீர் உள்ளே புகுந்து நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது.

மேலும் பனிப்பாறையில் மோதி கப்பலில் ஓட்டை ஏற்பட்டபோதிலும், கப்பலை தொடர்ந்து செலுத்தாமல், அப்படியே நிறுத்தி வைத்திருந்தால் கூட அதில் பயணித்த பயணிகளையும், கப்பல் சிப்பந்திகளையும் காப்பற்றியிருக்கலாம். ஆனால் கப்பலை நிறுத்துவதற்கு பதிலாக, தொடர்ந்து செலுத்த முயற்சித்ததால், கப்பலின் உடைந்த பகுதி வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து விட்டதாக" கூறி நமது அதிர்ச்சி டெசிபல்- ஐ கூட்டுகிறது அப்புத்தகம்!

இதுநாள் வரை இப்படி ஒரு தவறு நிகழ்ந்தது தெரிய வராமல் இருந்த நிலையில், அந்த கப்பல் விபத்தில் தப்பி பிழைத்த சார்லஸ் லைட்டாலர் என்ற மூத்த அதிகாரி ஒருவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 

சரி... இதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சார்லஸ், டைட்டானிக் கப்பல் விபத்து தொடர்பாக நடந்த இரண்டு கட்ட விசாரணைகளில் ஆஜரானபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டால், தனது மற்றும் தனது சக பணியாளர்களின் வேலை பறிபோய்விடுமே என்ற பயம் காரணமாகவே விசாரணைக் குழுவிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறுகின்றார் சார்லஸின் பேத்தியும், மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருப்பவருமான லூஸி பேட்டன்!

கப்பல் கேப்டன் அந்த முட்டாள்தனத்தை செய்யாமல் இருந்திருந்தால் , பனிப்பாறையில் கப்பல் மோதாமல் எளிதில் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு மைல் தொலைவில் இருக்கும்போதே பனிப்பாறையை கப்பலின் முதல் நிலை அதிகாரி வில்லியம் முர்டோச் பார்த்துவிட்டார். உடனடியாக அவர் இது குறித்து கப்பலை ஓட்டிக்கொண்டிருந்த ராபர்ட் ஹிட்ச்சின்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பதற்றமடைந்த ராபர்ட் கப்பலை இடதுபுறமாக திருப்புவதற்குப் பதிலாக,வலது புறமாக திருப்பினார். உடனே நடந்துவிட்ட தவறை உணர்ந்த வில்லியம், கப்பலை சரியான பாதையில் செலுத்துமாறு அப்போதுகூட எச்சரித்தார். அதனைக் கேட்டு ராபர்ட் சுதாரிப்பதற்குள் கப்பல் பனிப்பாறையில் மோதியேவிட்டது.

கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புக தொடங்கியும் கூட, கப்பலை நிறுத்தாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கப்பலை செலுத்தியுள்ளார் கேப்டன். இதனால்தான் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

கூடவே டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மேவும், தனது கப்பல் கம்பெனியின் பெயர் கெட்டுவிடுமே... லட்சக்கணக்கான டாலர்களை கொட்டி உருவாக்கிய தனது கப்பல் முதலீடு போய்விடுமே என்று பயந்து, கப்பலை தொடர்ந்து ஓட்டிச் செல்லுமாறு கேப்டனுக்கு உத்தரவிட்டுள்ளார்.கப்பல் மூழ்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

" கப்பலை தொடர்ந்து செலுத்தாமல் அப்படியே நிறுத்தியிருந்தால், கப்பல் தொடர்ந்து மிதந்தபடியே நின்றிருக்கும்; நான்கு மணி நேர பயண தொலைவிலேயே வந்து கொண்டிருந்த மற்றொரு கப்பலிலிருந்து உதவி கிடைத்திருக்கும்" என்றும் தனது தாத்தா ஆதங்கப்பட்டதாக அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூஸி!

தோனி தலைமையில் 20-20 உலகக் கோப்பையை வென்ற தினம்

COURTESY : WEBDUNIA TAMIL

செப்டம்பர் 24ஆம் தேதி, 2007ஆம் ஆண்டு அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சோதனையான காலக்கட்டம் சேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். கிரேக் சாப்பல் இந்திய அணியைக் குட்டிச்சுவராக்கிச் சென்ற காலம். 2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம், இலங்கை அணிகளுடன் தோற்று வெளியேறியிருந்தோம்.

திராவிட் அணித் தலைமைப் பொறுப்பு வேண்டாம் என்று கூறிவந்தார். இங்கிலாந்து தொடரில் ஒருவாறாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் திராவிட் தலைமையில் 3-4 என்று தோல்வி தழுவியிருந்தது.

இந்தச்சூழலில்தான் 1983-இல் கபில்தேவ் போல் தோனியின் தலைமை முதன் முதலாக அறிவிக்கப்பட்டு, சச்சின், திராவிட், கும்ளே, லஷ்மண், கங்கூலி இல்லாத ஒரு இளம் அணி தேர்வு செய்யப்பட்டது.

முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அடுத்தடுத்து ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து என்று வெற்றிகளைக் குவித்து இறுதிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஒரு மோசமான சூழ்நிலையில் இந்த தொடருக்கு வந்து போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முதல் போட்டியில் ஸ்கோர் அளவில் போட்டி சமன் ஆக பந்துகளை ஸ்டம்புகள் நோக்கி வீசும் பௌல் அவுட் முறையில் இந்தியா வெற்றிபெற்றது.

அதன் பிறகு மறக்க முடியாத வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக. யுவ்ராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராடின் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராகவும் யுவ்ராஜ் 30 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். அதில் அவர் 14 பந்துகளில் அரைசதம் எடுத்ததுதான் இன்றும் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசத சாதனையாகும்.

இறுதிப்போட்டி

ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் அன்று ரசிகர்கள் கூட்டம் அலை மோத, இரவு நேரம் என்பதால் இந்தியாவிலும் அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி முன் இந்த இறுதிப்போட்டியைக் காண அமர்ந்திருந்தனர்.

தோனி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். சேவாக் காயம் காரணமாக இடம்பெறாதது அன்று ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அந்தத் தொடர் முழுதும் டாஸ் வென்றால் பேட்டிங் என்ற முடிவில் இருந்தார் தோனி. கம்பீருடன் களமிறங்கியவர் யார் என்றே தெரியவில்லை.

அவர் மொகமது ஆசிப் பந்தை நேராக சிக்சருக்குத்தூக்கவும்தான் ஆஹா! யார் இவர்? என்று கவனிக்கத் துவங்கினர். அவர்தான் யூசுப் பத்தான்.

அதன் பிறகு ஒரு 3 பிறகு ஆசிப்பை மீண்டும் பாயிண்டில் ஒரு பவுண்டரி. ஆஹா! இவரை ஏன் இத்தனை போட்டிகளில் எடுக்கவில்லை என்று அனைவரும் நினைத்திருக்கும் தருணத்தில் அவர் ஆசிப் பந்தை புல் செய்ய முயன்று ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்தார்.

ஆனால் இந்தியா 16 பந்துகளில் 25 ரன்கள் என்ற அதிரடித்துவக்கம் கண்டது. உத்தப்பா களமிறங்கி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு கம்பீரும், யுவ்ராஜும் சேர்ந்தனர். யுவ்ராஜ் சற்றே தடுமாற, கம்பீர் அபாரமாக சில ஷாட்களை ஆஃப் சைடில் ஆடினார். அவருக்கு ஆஃப் சைடில் அன்று ஷோயப் மாலிக்கால் ஃபீல்டர்களை நிறுத்தி மாளவில்லை. அருமையாக ஆடினார் கம்பீர்.

யுவ்ராஜ் 14 ரன்கள் எடுப்பதற்குள் அவர் அரைசதத்தை எட்டினார். 8 ஓவர்களில் இருவரும் 63 ரன்களைச் சேர்த்தனர். இதில் யுவ்ராஜ் 14 ரன்கள்தான் எடுத்தார். அவுட்டும் ஆனார்.



அடுத்ததாக தோனி ஆட்டமிழந்தபோது இந்தியா 15.2 ஓவர்களில் 111/4 என்று ஆனது. ஆனால் கம்பீரின் அதிரடி தொடர ஸ்கோர் 130ஐ எட்டியபோது 18 ஓவர்கள் முடிவடைந்தது. கம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிச்கர்களுடன் 75 வெற்றி ரன்களைக் குவித்தார்.

கடைசி 19-வது ஓவரில் யாசர் அராபட் பந்தில் 2 பவுண்டரிகளுடன் ரோஹித் ஷர்மா 13 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் சொகைல் தன்வீர் பந்தை மிட்விக்கெட் திசையில் ஷர்மா சுழற்ற அது கேட்சாகிவிடும் போல் சென்றது. ஆனால் ஹபீஸ் அதனை தட்டி விட்டதால் சிக்சராக மாறியது. இர்பான் பத்தான் 3 ரன்கள் எடுக்க அந்த ஓவரில் இந்தியா 14 ரன்கள் எடுத்தது. ரோஹித் அபாரமாக முடித்து 16 பந்துகளில் 30 ரன்கல் எடுத்து நாட்-அவுட்டாக இருந்தார்.

பாகிஸ்தன் தரப்பில் உமர்குல் மட்டுமே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இந்தியா 157 ரன்கள் எடுத்தது.

ஆர்.பி.சிங், இர்ஃபான் பத்தான், ஜொகிந்தர் ஷர்மா அபாரம்

பலத்த ஆரவாரங்களுக்கு இடையே பாகிஸ்தான் தன் இன்னிங்ஸைத் துவங்கியது. முதல் ஓவரிலேயே ஆர்.பி.சிங் அபாரமாக வீசி 5-வது பந்தில் ஹஃபீஸை வீழ்த்தினார்.

ஆனால் அந்த விக்கெட்டை மறக்கடிக்குமாறு அடுத்த ஓவரிலேயே ஸ்ரீசாந்த் வந்தார். இம்ரான் நசீர் அவரைப் புரட்டி எடுத்தார்.2 பவுண்டரி இரண்டு சிக்சர்களுடன் அந்த ஓவரில் 21 ரன்களைக் விட்டுக் கொடுத்தார். ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

ஆனால் ஆர்.பி.சிங்கின் எழும்பி வரும் பந்துகளில் சிக்கல் இருந்தது. இதனால் அடுத்த ஓவரில் கம்ரன் அக்மல் வீழ்ந்தார். பாக்.3 ஓவரகளில் 31/2.

ஸ்ரீசாந்த் மீண்டும் வந்தார் ஆனால் அபாரமாக வீசி மைடன் ஓவர் ஆக்கினார். பாகிஸ்தான் 4 ஓவர்களில் 31/2. ஆனால் அதன்பிறகு 6-வது ஓவரில் இம்ரான் நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் என்ற அதிரடி ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை உத்தப்பா அபாரமாக ரன் அவுட் செய்தார். பாக். 6 ஓவர் 53/3.

14 ஒவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் தேவை. யூனிஸ்கான் மோசமான ஷாட்டிற்கு ஜொகிந்தரிடம் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 9 ஒவர்களில் 65/4 என்று தடுமாறியது.

ஷாகித் அஃப்ரீடியைக் கண்டுதான் அனைவருக்கும் பயம் இருந்தது. ஆனால் அவர் இர்பான் பத்தான் பந்தை, அதாவது அவர் எதிர்கொண்ட முதல் பந்தையே வெளியே அடிக்க முயன்று கொடியேற்றி 0-இல் ஆட்டமிழந்தார். ஷோயப் மாலிக்கைகையும் இர்பான் வெளியேற்ற பாகிஸ்தான் தோல்வியின் முனைக்கு வந்தது. அதாவது 77/6 என்று ஆனது.

அதன் பிறகு யாசிர் அராஃபட்டும், மிஸ்பாவும் இணைந்து 16-வது ஓவர் முடிவில் ஸ்கோரை 104 ரன்களுக்கு உயர்த்த அராஃபட்டை இர்ஃபான் பவுல்டு செய்தார். இருப்பது 4 ஓவர்கள் வெற்றிக்கு தேவையோ 54 ரன்கள். நமக்குத் தேவை 3 விக்கெட்டுகள்.

அப்போதுதான் வழக்கம்போல் பாகிஸ்தான் தனது உத்வேகத்தைக் காட்டியது. மிஸ்பா உல் ஹக் பேட் செய்ய ஹர்பஜன் பந்து வீச் அழைக்கப்பட்டார். 3 சிக்சர்களை மிட்விக்கெட் திசையில் விளாசினார் மிஸ்பா. 17-வது ஓவர் முடிவில் 123/7.

அடுத்த ஓவரை ஸ்ரீசாந்த் வீச முதல் பந்தே தன்வீரின் மட்டையிலிருந்து சிக்சராகச் சென்றது. 5-வது பந்து மீண்டும் தன்வீர் சிக்சர் விளாசினார். ஆனால் கடைசி பந்தில் யார்க்கரை ஆட முடியாமல் தன்வீர் பவுல்டு ஆனார். ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 138/8. தேவை 2 ஓவர்களில் 20 ரன்கள் இருப்பது 2 விக்கெட்டுகள்.

19-வது ஓவர் ஆர்.பி.சிங் வீச நல்ல வேளையாக மிஸ்பா ஸ்ட்ரைக்கில் இல்லை. உமர் குல்தான் இருந்தார். அந்த ஓவரில் 7 ரன்களே கொடுத்ததோடு உமர் குல்லையும் வீழ்த்தினார் ஆர்.பி.சிங், ஆனால் கடைசிபந்தில் ஆசிப் முக்கியமான பவுண்டரியை அடித்தார். 19 ஓவர் பாக்.145/9.

13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை அனுபவமற்ற ஜொகிந்தர் ஷர்மா வீசினார்.முதல் பந்து வைடு, இரண்டாவது பந்தை சுழற்றினார் மிஸ்பா மாட்டவில்லை.

2-வது பந்து ஃபுல்டாஸாக அமைய மிஸ்பா சிக்சருக்குத் தூக்கினார் அதை. 4 பந்துகளில் 6 ரன்களே தேவை என்ற நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை.

அப்போதுதான் மிஸ்பா தான் வாழ்நாள் முழுதும் வருந்திக்கொண்டிருக்கும் பெரும்தவறைச் செய்தார். ஸ்டம்புகளை விடுத்து விக்கெட் கீப்பர் தலைக்குமேல் ஸ்கூப் ஆடினார் மிஸ்பா, பந்து 'மிஸ்'பா... சரியாக அடிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அதனை கேட்ச் பிடிக்க இந்தியா 5 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக இர்பான் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக ஷாகித் அஃப்ரீடி தேர்வு செய்யப்பட்டார்.

கபில்தேவ் தலைமை இந்திய அணி மேற்கிந்திய அணியை வீழ்த்தி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு சர்வதேச அளவில் மீண்டுமொரு மகுடம்!

கோப்பையைப் பெற்ற தோனி அப்போது கூறினார்: "மீதமுள்ள எனது வாழ்நாளில் இதனை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்" என்றார். மேலும் கோப்பையை வென்றிருக்காவிட்டாலும் கூட பெரிய கவலை ஒன்றும் இல்லை என்று அவர் மைக்கில் கூறியது, வித்தியாசமான மனோ நிலை படைத்த ஒரு புதிய தலைமை இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்ததை பறைசாற்றியது.

அன்று முதல் அவர் 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்பட்டார். எப்படி 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக சாம்பியனானது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய பெருமையோ, அதே போல் இந்த செப்டம்பர் 24ஆம் தேதியும் இந்திய கிரிக்கெட் அணியும் ரசிகர்களும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும்.

Wednesday, September 22, 2010

நினைவுப்பாதை: 'டை' ஆன சென்னை டெஸ்ட்


COURTESY : WEBDUNIA TAMIL

செப்டம்பர் 22ஆம் தேதியான இன்றைய தினத்தில் வரலாற்றில் பலதரப்பட்ட மனிதரகளுக்கும், நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல நிகழ்ந்திருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை 1986 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் போட்டி மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாகும்.

இன்று கவாஸ்கர்/பார்டர் கோப்பை என்று இந்திய - ஆஸ்ட்ரேலிய தொடர் பிரபலமடைந்ததற்குக் காரணமான பார்டரும், கவாஸ்கரும் தங்களை எதிர்த்து விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும் இது.

கவாஸ்கர் தொடர்ச்சியாக 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இந்த டெஸ்ட் போட்டியின் முதற்கண் சாதனையாகும்.

டீன் ஜோன்ஸின் காவியமான இரட்டைச் சதம், வெயில் தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தது, கிரேக் மேத்யூஸ் என்ற ஆஸ்ட்ரேலிய ஆஃப் ஸ்பின்னரின் மைதான சேஷ்டைகளும், ஆஸ்ட்ரேலிய வீரர்களிடத்தில் பொதுவாகக் காணப்படாத நட்பான புன்முறுவலும், கபில்தேவின் அபாரமான சதமும், கவாஸ்கரின் வெற்றிகான 90 ரன்களும், அனைத்தையும் விட இந்த நாளில் சேப்பாக்கத்தில் 30,000 ரசிகர்கள் களைகட்டியதும் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

1960-61 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்று இதற்கு முன் ரன் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அது 498-வது டெஸ்ட் போட்டி அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினத்தில் சென்னையில் டை ஆன டெஸ்ட் போட்டி 1052-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத டெஸ்ட் போட்டியாக மாற்றியதில் ஆலன் பார்டருக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. அவர் 4ஆம் நாள் ஸ்கோரான 170/5 என்று டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 5ஆம் நாளன்று சவாலான 348 ரன்கள் இலக்கை நிர்ணயித்தார்.

முதலில் டாஸ் வென்ற ஆலன் போர்டர் ஒன்றுக்கும் உதவாத ஆட்டக்களத்தில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆஸ்ட்ரேலிய அணியில் டெவிட் பூன், ஆலன் பார்டர் சதம் எடுக்க, ஆண்ட்ரூ ஜோன்ஸ் அபாரமான இரட்டைச் சதம் எடுத்தார். ஆனால் உடலில் உள்ள தண்ணீர் வற்றி அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையாயிற்று.

3ஆம் நாள்தான் ஆஸ்ட்ரேலியா 574/7 என்று டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் ஷிவ்லால் யாதவ் மட்டுமே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்திய அணியில் அப்போது அதிரடி துவக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இவரும் கவாஸ்கரும் களமிறங்கினர். வேடிக்கை என்னவெனில் கவாஸ்கர் 8 ரன்கள் எடுப்பதற்குள் ஸ்ரீகாந்த் அரை சதம் எடுத்து முடித்து விட்டார்.

புரூஸ் ரீட், கிரெய்க் மெக்டர்மாட் அவரிடம் சரியான வாங்கு வாங்கினர். ஸ்ரீகாந்த் 62 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா கவாஸ்கர், அமர்நாத் ஆகியோரையும் இழந்து 65/3 என்று ஃபாலோ ஆனைத் தவிர்க்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அதன் பிறகு அசாருதீன் (50), சாஸ்திரி (62) பண்டிட் (35) என்று ஸ்கோர் 3ஆம் நாள் ஆட்டத்தில் 270/7 என்ற நிலையை எட்டியது. ஆனாலும் ஃபாலோ ஆன் அச்சுறுத்தல் இல்லாமலில்லை. விழுந்த 7 விக்கெட்டுகளில் கிரெக் மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். அவரது பந்து வீச்சும், பீல்டிங்கும் பெரும் அச்சுறுத்தலாயிருந்த சமயம் அது. 

கபில்தேவின் அபாரமான கேப்டன் இன்னிங்ஸ்!

4ஆம் நாளின் போது கபில்தேவ் 33 ரன்களுடனும், இவரது சிஷ்யர் சேத்தன் ஷர்மா 14 ரன்களுடனும் களமிறங்கினர்.

சேத்தன் ஷர்மா ஒரு முனையைத் தக்கவைக்க, கபில்தேவின் அதிரடி இன்னிங்ஸை எதிர்பார்த்து அன்று திரண்டிருந்த ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. கபில்தேவ் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடியதோடு அபாரமான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார்

ஷர்மாவும் கபிலும் 8-வது விக்கெட்டுக்காக 85 ரன்களைச் சேர்த்தனர் ஷர்மா 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கபில்தேவ் மொத்தம் 21 பவுண்டரிகளை விளாசினார். 50 ரன்களிலிருந்து சதத்தை எட்டும் வரை 11 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குதியாட்டம் போட வைத்தார்.

ஷிவ்லால் யாதவும் 19 ரன்கள் எடுத்து கைகொடுக்க, கபில்தேவ் 138 பந்துகளில் 21 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 119 ரன்கள் எடுத்து கடைசியாக மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். இந்தியா 397 ரன்கள் எடுத்திருந்தாலும் 177 ரன்கள் பின் தங்கியிருந்தது.

அபாரமான டிக்ளேர்!

ஆஸ்ட்ரேலியா தன் இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியபோது ஜெஃப் மார்ஷ், ரவிசாஸ்திரியின் 100-வது விக்கெட்டாகச் சாய்ந்தார்.

சற்றே வேகமாக ரன்களைக் குவித்த ஆஸ்ட்ரேலியா 170/5 என்று 4ஆம் நாள் ஆட்ட்டத்தை முடித்தது.

ஒருவருக்கும் தெரியாது 5ஆம் நாளன்று வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான் புகழ் பெற்ற டிக்ளரேஷன் அப்போது செய்யப்படும் என்று.

ஆனால் மறுநாள் இந்தியா களமிறங்கும்போதுதான் ஆலன் போர்டர் என்ற சவாலான ஆஸ்ட்ரேலிய கேப்டன் நம் கண்களுக்குத் தெரிந்தார். அந்தத் தொடரில் இதற்கு முன்பான இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே டிரா ஆக, இதுவும் அறுவையான டிரா ஆகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் டெஸ்ட் போட்டிக்கான விறுவிறுப்பைக்கூட்ட பார்டர் டிக்ளேர் செய்தார்.

போர்டர் டிக்ளேர் செய்வாரா மாட்டாரா என்று தெரியாத நிலையிலும் சென்னை சேப்பாக்கத்தில் அன்று 30,000 ரசிகர்கள் திரண்டனர் என்பது அப்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடப்பட்ட விதத்தை எடுத்துரைப்பதாய் அமைந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க 5ஆம் நாள் ஆட்டம்!

மொத்தம் அன்றைய தினம் 86 ஓவர்கள் மீதமுள்ளன 348 ரன்கள் வெற்றி இலக்கு. அப்போதெல்லாம் ஸ்ரீகாந்த் என்றால் ரசிகர்களுக்குக் கொள்ளைப் பிரியம்.

அவரும் கவாஸ்கரும் இறங்கும் போது மைதானத்தில் ஆரவாரக்கூச்சல் அதிகமானது.

வழக்கம் போல் ஸ்ரீகாந்த், மெக்டர்மாட், புரூஸ் ரீட் ஆகியோரை பொளந்தார். மெக்டர்மாட் 5 ஓவர்களி 27 ரன்களை விட்டுக் கொடுத்து அதன் பிறகு ஏனோ அவர் வீசவில்லை. 49 பந்துகளில் 6 பவுண்டரிகளூடன் 39 ரன்கள் எடுத்து ஸ்ரீகாந்த் மேத்யூஸ் பந்தில் ஆட்டமிழக்க, அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து ஸ்கோரை உணவு இடைவேளையின் போது 94 ரன்களுக்கு உயர்த்தினர்.

அமர்நாத்தும் கவாஸ்கரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 103 ரன்களைச் சேர்த்தனர். இருவரது ஆட்டமும் ஒரு கடைசிநாள் சுழற்பந்துகள் திரும்பும் ஆட்டக்களத்தில் எப்படியான கறார் தடுப்பு உத்திகளையும், ஷாட்டிற்கான பந்துகளை தேர்வு செய்வது எப்படி என்பதையும் இளைஞர்களுக்குக் கற்று கொடுக்கும் விதமான ஆட்டமாகும்.

அமர்நாத்தும் 51 ரன்கள் எடுத்து மேத்யூஸிடம் ஆட்டமிழந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 193/2 என்று இருந்தது. இன்னும் 30 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 155 ரன்கள்.
இந்திய அணிக்கு இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அசார், கபில், ரவி சாஸ்திரி ஆகியோர்தான்.

கவாஸ்கர் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 168 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இந்தியா 204/3.

அசாருதீனும், சந்த்ரகாந்த் பண்டிட்டும் இணைந்து ஸ்கோரை விறுவிறுவென்று 251 ரன்களுக்கு உயர்த்த, 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 42 ரன்கள் எடுத்த அசாருதீன் ரே பிரைட் பந்தில் ஆட்டமிழந்தார் இந்தியா 251/4.

அடுத்துதான் இந்தியாவுக்கு பேரடி. கபில்தேவ் 2 பந்துகளில் 1 ரன்னிற்கு பெவிலியன் திரும்பினார். 253/5 . பண்டிட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரவிசாஸ்திரி மேத்யூஸை 2 சிக்சர்கள் அடித்து சென்னை ரசிகர்களை எழுந்து நிற்கவைத்தார். சேத்தன் ஷர்மா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது இந்தியா 331/7 என்று ஆனது. இப்போது டெஸ்ட் போட்டியின் அனைத்து 4 முடிவுகளும் சாத்தியமாயின.

சரியான தருணத்தில் ஷிவ்லால் யாதவ் ஒரு சிக்சரை அடித்து பிறகு ஆட்டமிழந்தார் ஸ்கோர் 344/9 ஆனது.

கடைசி ஓவர் வந்தது மணீந்தர் சிங் களமிறங்கினார். இந்திய வெற்றிக்குத் தேவை 4 ரன்கள்.

கடைசி ஓவரை வீசியவர் கிரெக் மேத்யூஸ்,. பேட்டிங்கில் ரவிசாஸ்திரி உள்ளார். இவர் எப்படியும் மேத்யூஸ் பந்தை இறங்கி வந்து சிக்சருக்குத் தூக்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு, ரசிகர்களின் ஆரவாரக்கூச்சல் எந்த ஒரு வீச்சாளரையும் அச்சுறுத்தும், ஆனால் மேத்யூஸ் அசரவில்லை.

முதலில் இரண்டு ரன்களை எடுத்த சாஸ்திரி, அடுத்த பந்தில் ஆட்டத்தை தோல்வியிலிருந்து காக்கும் முகமாக ஒரு ரன் எடுத்து பெரிய தவறைச் செய்தார்.

மணீந்தர் சிங் பேட்டிங் முனைக்கு வந்து ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்கிடையே மேத்யூஸ் பந்தை எதிர்கொண்டார். பின்னால் சென்று பந்தை கால்காப்பில் வாங்கினார் நடுவர் கையை உயர்த்தினார் ஆட்டம் ஸ்கோர் எண்ணிக்கை அளவில் சமன் ஆனது. அதாவது டை ஆனது.

சாஸ்திரி 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

நடுவர் தோதிவாலாவா, விக்ரம் ராஜுவா என்று தெரியவில்லை. மணீந்தர் சிங்கிற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தது தவறான தீர்ப்பு என்று ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம் புரிந்தார். கடைசியில் கோபமாக வெளியேறினார்.

இரு அணியினரின் நடத்தை...

கடைசி நாளன்று டென்ஷனில் இரு அணியினரின் நடத்தையும் சற்றே மோசமாக இருந்தது. ஆலன் பார்டர் அடிக்கடி நடுவரின் தீர்ப்புகளூக்கு எதிர்ப்பு காட்டி வந்தார். மேத்யூஸ், விக்கெட் கீப்பர் ஜோரர் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் கவனத்தை கலைக்க ரே பிரைட் முயன்றதால் அவர் பிரைட்டை நோக்கி தன் முஷ்டியை உயர்த்தினார். ஜோன்ஸ் இரண்டாவது இன்னின்சில் மணிந்தர் சிங்கிடம் ஆட்டமிழந்தார். ஆனால் மணீந்தர் அவர் ஆட்டமிழந்து செல்லும் போது 40 அடி அவரைத் துரத்திச் சென்று கடும் வசை பாடினார்.

இவ்வளவு சம்பவங்கள் நடந்தாலும் மறக்க முடியாத இந்த செப்டம்பர் 22-ஐ நமக்கு அளித்தது சென்னை சேப்பாக்கம் என்பதை நம் நினைவிலிருந்து அகற்ற முடியாது. 

Welcome

This blog contain interesting tamil article.Thank you for your visit.